பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (02.05) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 30ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது. இதன்போது டீசலின் விலையும் 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. 

இருப்பினும், பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று (02.05) அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

Social Share

Leave a Reply