வவுனியாவில் அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்

வவுனியாவில் இதுவரை 123 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்துள்ளார்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நேற்று (27) தொழுநோய் குறித்து இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கின் போதே அவர இதனை தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் பிரதேசத்தில் மாத்திரம் 69 தொழு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன்போது தொழுநோய் தொற்றும் முறை மற்றும் அதன் அறிகுறிகள், அதற்கான மருத்துவ உதவிகள் போன்ற விடயங்களையும் கூறியுள்ளார்.

இந்த கருத்தரங்கில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version