கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி

மாத்தறையில் புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version