அதிகரிக்கும் டெங்கு நோய்ப் பரவல் 

நிலவும் மழையுடனான வாநிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து கடந்த மாதம் வரை 24,920 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 2,647 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

Social Share

Leave a Reply