களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03) கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.
அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார்.
கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
மேலும், அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
[6/4, 05:39] : ஊழல்,மோசடியை பாதுகாக்கும் அரசாங்கமே நாட்டை ஆள்கிறது – சஜித்
கொள்ளையர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
திருட்டு, ஊழல், இலஞ்சம், மோசடி போன்றவற்றை பாதுகாக்கும் அரசாங்கமே தற்போது நாட்டை ஆட்சி செய்வதாக
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 218 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,
அம்பாறை, தெஹியத்தகண்டிய, சந்துன்புர தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (03.06) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எமது நாடு தற்போது வங்குரோத்தடைந்தொரு நாடாகும். இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு வெளிப்படையான,
நேர்மையான மற்றும் திருட்டு இல்லாத திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
என்றாலும் அவ்வாறானதொரு எந்த திட்டமும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை.
பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கும் Meropenem என்ற தடுப்பூசி 2022 நவம்பரில் நாட்டில் கையிருப்பில் இல்லை எனக் கூறி,
அவரச கொள்முதல் முறையின் மூலம் 450,000 தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டுக்கு முப்பத்தாறு கோடி
எண்பத்தி ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கூறுகிறது.
இது நாட்டின் வளங்களை பட்டப்பகலில் திருடும் செயலாகும்.
488590 தடுப்பூசிகள் அன்று கையிருப்பில் இருந்தன. ஒரு குப்பியும் இல்லை என கூறி, அவரச கொள்முதல் மூலம் தான் இந்தப் புதிய
பங்கு பெறப்பட்டுள்ளது. ஒரு குப்பி ரூ.1075 க்கு கிடைத்தும், ரூ.1895 க்கு இது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயம், வியாபாரம் மற்றும் தொழில் முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ள வங்குரோத்தான நாட்டில் கூட தடுப்பூசி குப்பிகளில்
இருந்து கமிஷன் பெற்றுள்ளனர். இந்த ஊழல் செயற்பாட்டை முன்னெடுத்த முன்னாள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை
ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்தது. இதில் அவரைப் பாதுகாக்க 113 பேர் கைகோர்த்திருந்தனர். அவர்கள் தவறான விடயத்துக்கு கைகளை
உயர்த்தி, ஆதரித்து திருட்டு, இலஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பாதுகாத்து வருகின்றனர் .
இந்தத் தடுப்பூசிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அதிகப்படியான நிதியை ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்க பயன்படுத்தியிருக்காலம்.
ஏமாற்றும் பொய்யுமே நாட்டில் 24 மணி நேரமும் நடந்து வருகிறது. 220 இலட்சம் மக்களும் முட்டாள்கள் என்றே ஆட்சியாளர்களால் கணக்கிட்டு நடந்து வருகின்றனர்
என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பொய்யான செய்திகளை பரப்புவதால், தவறாக சித்தரிப்புகளை செய்து குழப்ப நிலைகளை ஏற்படுத்துதல், ஏமாற்றி கமிஷன்
எடுத்தல் என்பன தற்போது பரவலாக நடந்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் ஆட்சியில், ஊழலுக்கு எதிராக வெளிப்படைத்தன்மையுடன்
போராட உறுதிபூண்டுள்ளோம்.
நாட்டின் 220 இலட்சம் மக்களை வாழ வைக்கும் சகாப்தத்தை உருவாக்குவோம். அனைத்துத் திருட்டுகளும் ஒழிக்கப்பட்டு,
திருடிய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நாடு இழந்த பணம், சொத்து செல்வங்களை மீண்டும் நாட்டுக்கு மீளப்பெறுவோம்” என கூறியுள்ளார்.