டென்மார்க், ஸ்லோவேனிய போட்டி சமநிலையில் நிறைவு

ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட தொடரில் நேற்று டென்மார்க், ஸ்லோவேனியா அணிகள் மோதின.

ஜேர்மனி, ஸ்டட்கர்ட் இல் நடைபெற்றது. போட்டி ஆரம்பித்தது முதல் டென்மார்க் அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. 17ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது. ஸ்லோவேனியா அணிக்காக முதலாவது கோலை ஜன்சா 77ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொடுத்தார். ஐரோப்பா கிண்ணம் 2024 இல் சமநிலையில் நிறைவடைந்த போட்டி இதுவே.

Social Share

Leave a Reply