பறவைக் காய்ச்சல் நோய் பரவும் நாடுகளிலிருந்து விலங்குகள் அல்லது விலங்கு தயாரிப்புக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படாது என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் இன்று(23.06) அறிவித்தது.
அண்மைக்காலமாக சில நாடுகளில் பதிவாகி வரும் ஏவியன் இன்புளுவன்சா A(H5N1) வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சில மாநிலங்களில் முதல் முறையாக கால்நடைகள் ஏவியன் இன்புளுவன்சா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளதாக வைத்தியர் ஹேமலி கொத்தலாவல சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.