யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்யும் முயற்சியில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று(25.06) அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகையும் இந்திய மீனவர்களையும் கைது செய்வதற்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.
இந்தியப் மீனவர்களின் படகை கைப்பற்ற முயற்சித்த போது இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதன்போது இலங்கை கடற்படை வீரர் மீது இந்திய படகு மோதியதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது
சம்பவத்தின் போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், அவர்களின் படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.