ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு 

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அச்சகம், பொலிஸ், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கான மூலப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து காணப்படுகின்றமையினால், முழுமையான செலவு தொடர்பில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகேவும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply