யாழ் வாகன விபத்து – சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியசாலையில் சிகிச்சைப்
பெற்று வந்த நபரொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தின் போது சம்வப இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த
நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம்
பகுதியில் ஏ9 வீதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு இந்த விபத்து சம்பவித்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸொன்று
பழுதடைந்ததால் ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் போது அதே திசையில் வருகை தந்த லொறியொன்று பஸ்ஸின் பின்புறமாக நின்று கொண்டிருந்த பயணிகள்
மற்றும் பஸ் மீது மோதியதில் வீதியில் நின்ற பயணிகள் மூவர் லொறியில் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தனர்.

Social Share

Leave a Reply