சம்பந்தனின் மறைவுக்கு இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இரங்கல்களைத் தெரிவித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“இலங்கை தமிழ் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைந்தேன். பல தசாப்த காலமாக எனக்கும் அவருக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்கிறேன். 

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதிக்கான போராட்டத்துக்காக அவர் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்திருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.”

Social Share

Leave a Reply