லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

கேகாலை ,எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து இன்று (03.07) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த 60 வயதுடைய ஆணும் 50 வயதுடைய பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 03 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply