சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று (10.07)
வழங்கி வைத்தார்.

இந்த மின்பிறப்பாக்கியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்
கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பெற்றுக் கொண்டார்.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான
மின்சார மாற்றீடுகள் இல்லாமையால் கடந்த சில நாட்களாக சர்ச்சை ஏற்பட்டது.

குறிப்பாக, வைத்தியசாலையில் கடமையாற்றி, தற்போது விடுமுறையில் உள்ள பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனன்
இதுதொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதனடிப்படையில், மேலதிக மின்பிறப்பாக்கியின் அவசியத்தை கருத்திற்கொண்டு வைத்தியசாலைக்கு தற்காலிக அடிப்படையில்
அதனை பெற்றுக் கொடுப்பதாக கடந்த 07.07.2024 அன்று உறுதியளித்திருந்தேன்.

அந்த வாக்குறுதிக்கமைய, 150kVA வலுவுடைய மின்பிறப்பாக்கியொன்று தற்காலிக அடிப்படையில் இன்றையதினம் (10.07.2024)
வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, நிரந்தர மின்பிறப்பாக்கியை பெற்று வைத்தியசாலையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும்,
அதற்கான அறையொன்றை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் Dr. கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தியுள்ளார்.

மின்பிறப்பாக்கி கையளிப்பு நிகழ்வில், சாவகச்சேரி பிரதேச இணைப்பாளர் திரு. டுபாகரன், சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட எனது
வட்டாரப்பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாவகச்சேரி மக்களின் தேவையுணர்ந்து எனது வேண்டுகோளை ஏற்று இந்த மின்பிறப்பாக்கிக்கான அனுசரணை வழங்கிய அன்பர்களுக்கு
சாவகச்சேரி மக்கள் சார்பிலும், என்சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைப்பு

Social Share

Leave a Reply