வேலைநிறுத்ததில் ஈடுபடாதவர்களுக்கு 10,000 ரூபா 

சமீபத்திய வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 10,000 ரூபாய் ஒரு முறை கொடுப்பனவை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

மேலும், குறித்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply