கிளப் வசந்த கொலை – யுவதி ஒருவர் கைது

அதுருகிரிய பிரதேசத்தில் கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த
பெரேராவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர்,
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த
உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Social Share

Leave a Reply