சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் வருகைத்தரவுள்ளதாக
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்கள் வருகைத்தருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் காலம் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தடையாக அமையாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Social Share

Leave a Reply