முட்டை இறக்குமதி தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று 

முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று(22.07) அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இன்று(22.07) முதல் ஒரு முட்டை 42 ரூபாய்க்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply