ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு 

அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபா வழங்குவதற்கு நேற்று(24.07) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதனுடாக சுமார் 7 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

அனைத்து துறைகளிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply