தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை: தேர்தலுக்கு இடையூறு? 

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நேற்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு, தயாராகவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply