அமைச்சர் பவித்ராவும் ரணிலுக்கு ஆதரவு 

அமைச்சர் பவித்ராவும் ரணிலுக்கு ஆதரவு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ களமிறங்கவுள்ளதாக நேற்று(07.08) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் ஏனைய முக்கிய உறுப்பினர்களை போலவே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

Social Share

Leave a Reply