தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பு - விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த 05ஆம் திகதியுடன் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply