இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (29.08) இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் சுமார் ஒன்றரை மணி நேரமாக பரஸ்பர கருத்துக்களைக் பரிமாறிக் கொண்டனர்.