கண்ணிவெடி வெடித்ததில் நால்வர் படுகாயம்

கண்ணிவெடி வெடித்ததில் நால்வர் படுகாயம்

முல்லைத்தீவு மாங்குளத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊழியர்கள் நால்வர் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர்.

முன்னாள் போராளிகளால் உள்நாட்டுப் போரின் போது அப்பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அரச சார்பற்ற நிறுவனம் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த தொழிலாளர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply