“13” ஐ நடைமுறைப்படுத்துவதாக சஜித் மட்டுமே உத்தரவாதம் அளித்துள்ளார் – மனோ

“13” ஐ நடைமுறைப்படுத்துவதாக சஜித் மட்டுமே உத்தரவாதம் அளித்துள்ளார் - மனோ

அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மாத்திரமே
தெளிவான மற்றும் நிலையான உத்தரவாதத்தை அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (06.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

தெளிவான உத்தரவாதத்தை சஜித் பிரேமதாச மட்டுமே அளித்திருப்பதாக தெரிவித்த மனோகணேசன் ஏனைய வேட்பாளர்களுக்கு இந்த தகைமை
இல்லையென்றும் விமர்சித்தார்.

ஏனைய வேட்பாளர்கள் தெளிவின்மையால் அவர்களும் குழம்பி மக்களையும் குழப்பிக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

சஜித் பிரேமதாச சமஷ்டி குறித்தோ 13 ப்ளஸ் குறித்தோ பேசவில்லையென்றும் யாப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை
நடைமுறைப்படுத்துவதனூடாக வடக்கு, கிழக்கில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைபேறுடைய சூழலை
உருவாக்குவதற்கு அவர் அவகாசம் அளிக்கிறார்” என மனோகணேசன் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version