
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 80 சதவீத உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசேட பாதுகாப்புடன் வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், மீதமிருக்கும் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணிகளை இவ்வார இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.