நியூசிலாந்து தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

16 பேர் கொண்ட டெஸ்ட் குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான குழாமில் இடம்பெற்றிருந்த நிசன் மதுஷ்கவிற்கு பதிலாக, ஓஷத பெர்னாண்டோ மீண்டும் இலங்கை டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். ஓஷத பெர்னாண்டோ தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.  

இலங்கை குழாம்: தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷத பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மென்டிஸ், ஜெப்ரி வண்டர்சே, மிலன் ரத்நாயக்க

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி, காலியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ம் திகதி நடைபெறவுள்ளது. 

இந்த போட்டியின் போது 21ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதால், அன்றைய தினம் ஆட்டம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, இந்த போட்டியை இலவசமாகப் பார்வையிடுவதற்குப் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போட்டியை இலவசமாகப் பார்வையிட விரும்புபவர்கள் காலி சர்வதேச மைதானத்தின் 4வது நூழைவாயிலினூடாக மைதானத்திற்குள் நுழைய முடியும் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 

தொடரின் இரண்டாவது போட்டி காலியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply