போதைப்பொருளுடன் இருவர் கைது

போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது இருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கல்கிசை ரயில் நிலையத்திற்கு அருகாமையிலும், இரத்மலானை பகுதியிலும் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10.2 மில்லிகிராம் மற்றும் 6.5 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 மற்றும் 42 வயதுடைய இரத்மலானை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply