தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் இன்று நள்ளிரவுக்கு முன்னர் நீக்குவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதான அலுவலகமும் பழைய தொகுதிக்கு ஒரு அலுவலகமும் மாத்திரமே திறக்கப்பட முடியும்.
ஏற்கனவே நிறுவப்பட்ட ஏனைய அனைத்து அலுவலகங்களையும் அந்தந்த வேட்பாளர்கள் அகற்ற வேண்டும் என்பதுடன் அவ்வாறு அகற்றாவிட்டால் பொலிஸார் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.