முன்னாள் சுகாதார அமைச்சரின் மகனுக்குச் சொந்தமான அதிசொகுசு வீடுகளைப் பயன்படுத்தத் தடை

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகனுக்குச் சொந்தமான அதிசொகுசு வீடுகளைப் பயன்படுத்தத் தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவினால் கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு அதிசொகுசு வீடுகளைப் பயன்படுத்துவதற்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி பகுதியில் குறித்த இரண்டு அதிசொகுசு வீடுகளும் ரமித் ரம்புக்வெல்லவினால் 80 மில்லியன் மற்றும் 65 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த அதிசொகுசு வீடுகளைப் பயன்படுத்துவதற்குத் தடை உத்தரவு பிறப்பித்தது.

Social Share

Leave a Reply