வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்குமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (26.09)
உத்தரவிட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்களால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள் மீது வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை பொலிஸாரிடம் சமர்ப்பிக்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி காவல் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கத் தவறியமை மற்றும் பிணை நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply