பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் – பிரதமர்

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் - பிரதமர்

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று(26.09) நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் எனவும், மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத் தன்மையின் அவசியம் தொடர்பிலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply