மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கு அமைவாக இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை குறைப்பதற்காக இந்த ஆண்டில் மின்சார சபையினால் முன்மொழிவு முன்வைக்கப்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.