எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை

காலி, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை(26.10) காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது.

48 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலுக்கான உத்தியோகத்தர்கள், வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் இன்று(25.10) உரிய வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply