30 இலட்சம் ரூபா பெறுமதி வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மீட்பு

30 இலட்சம் ரூபா பெறுமதி வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மீட்பு

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம், பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள்
இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணப் பொதியிலிருந்து 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Social Share

Leave a Reply