நுகர்வோக்கு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

நுகர்வோக்கு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ குறிப்பிட்ட திகதியை அறிவிக்கவில்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தமாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பஸ்கள் மற்றும் லொறிகள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும்
என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (07.12) கருத்து தெரிவிக்கும போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முதல் கட்டமாக பஸ்கள் மற்றும் லொறிகளின் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாகனங்கள் இறக்குமதி செய்யவுள்ள நிலையில் மக்கள் குழப்படைய தேவையில்ல என கூறிய அவர் பல்வேறு தரப்பினரின் அறிக்கைகளின் அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்யவோ கொள்வனவு செய்யவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply