Clean Sri Lanka வேலைத்திட்டம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பம்

Clean Sri Lanka வேலைத்திட்டம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

341 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, Clean Sri Lanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்டோர் இந்த செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களை தவிர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் இந்த செயலணியில் இடம்பெற்றுள்ளார்.

16 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயலணியில் கலாநிதி அனுருத்த கமகே, கலாநிதி காமினி படுவிடகே உள்ளிட்டவர்கள் உள்ளடங்குகின்றனர்.

Social Share

Leave a Reply