மன்னார் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்

மன்னார் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத்பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய வயோதிபரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில், உறவினர்கள் இவரைத் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் (30.12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply