ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இன்று சந்திக்கவுள்ளார்.
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று (15.11) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார்.
ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.