மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை(27.02) மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நாளைய தினத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் சனிக்கிழமையன்று முன்னெடுப்பதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.