கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.