தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய 28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எச்.என்.அசங்க, ஜி.ஏ.பி.குணதிலக்க, கே.கே.குணசேகர, ஆர்.பி.அமரசிங்க மற்றும் ஆர்.எச்.பி.குணசேகர ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை உள்ளடக்குவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான என்.என்.எஸ்.மென்டிஸ், டபிள்யூ.பி.ஜே சேனாதீர, எம்.எம்.ஏ.பி மஹகிரில்ல மற்றும் எம்.யு.பி.களுபஹன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது