ஹொரணை – இரத்தினபுரி வீதியில் விபத்து – 15 பேர் காயம்

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (27.03) இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply