பல இடங்களில் மழை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version