மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (14,06) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் மலை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பாக செயற்படும்மாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.