இங்கிலாந்தில் நடைபெற்று வரும், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியா அணி பலமான நிலையில் காணப்படுகிறது. இந்தியா அணியின் தலைவர் சுப்மன் கில்லின் அபார துடுப்பாட்டம் இதுக்கு காரணமாக அமைந்தது. தனது முதல் இரட்டை சதத்தை அவர் பூர்த்தி செய்தார். தனித்து நின்று பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களோடு இணைந்து 269 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 151 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 587 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் யஷாஸ்வி ஜய்ஸ்வால் 87 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா 89 ஓட்டங்களையும் பெற்றனர். வொசிங்டன் சுந்தர் 42 ஓட்டங்கள். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சொஹைப் பஷீர் 3 விக்கெட்களையும், க்றிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஹரி புரூக் 30 ஓட்டங்களையும். ஜோ ரூட் 18 ஓட்டங்களையும் ஆட்டமிழக்கமால் பெற்றுள்ளனர். 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இங்கிலாந்து அணி இழந்திருந்தது. இந்தியா அணியின் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.