இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற முடியுமா?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இந்தியா அணி பலமான நிலையில் முன்னிலையொடு காணப்படுகிறது. இந்தியா அணியின் தலைவர் சுப்மன் கில்லின் அபார துடுப்பாட்டம் இதுக்கு காரணமாக அமைந்தது. தனது முதல் இரட்டை சதத்தை அவர் பூர்த்தி செய்தார். தனித்து நின்று பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களோடு இணைந்து 269 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 151 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 587 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் யஷாஸ்வி ஜய்ஸ்வால் 87 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா 89 ஓட்டங்களையும் பெற்றனர். வொசிங்டன் சுந்தர் 42 ஓட்டங்கள். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சொஹைப் பஷீர் 3 விக்கெட்களையும், க்றிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பாட்டததை ஆர்மபித்தது. 85 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஹரி புரூக், ஜெமி ஸ்மித் ஆகியோர் நிலைமையை தலைகீழாக மாற்றினார்கள். 303 ஓட்டங்களை அதிரடியாக பெற்று இங்கிலாந்து அணியினை மீட்டு எடுத்தனர். இறுதியில் சகல விக்கெட்களையும் இழந்து 89.3 ஓவர்களில் 403 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்டது. ஹரி புரூக் 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஜெமி ஸ்மித் ஆட்டமிழக்கமால் 184 ஓட்டங்கள். ஜோ ரூட் 22 ஓட்டங்களை பெற்றார். இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 6 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்,

இந்தியா அணி இரண்டாம் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்தியா அணி 244 ஓட்டங்கள் முன்னிலையில் காணப்படுகிறது. லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்கள். ஜய்ஸ்வால் 28 ஓட்டங்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version