இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனநிலையை எதிர்மறை விமர்சனங்கள் பாதிக்கின்றன – தசுன் ஷானக

இலங்கை கிரிக்கெட் தொடர்பாக வெளிப்படும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள், வீரர்களின் மனநிலையை கடுமையாக பாதிப்பதாக அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு–20 உலகக் கிண்ணத் தொடர் சுப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணியுடனான போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். வெளியில் உருவாக்கப்படும் எதிர்மறை சூழல் இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரும் சேதம் விளைவிப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தசுன் ஷானக வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply