Finalissima கால்பந்து போட்டி ரத்து!

மத்திய கிழக்கின் போர் சூழ்நிலை காரணமாக கட்டாரில் நடைபெறவிருந்த ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா இடையேயான Finalissima கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக UEFA அறிவித்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா இடையேயான இந்த சிறப்பு போட்டி மார்ச் 27ம் திகதி தோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இதனால் லியோனல் மெஸ்ஸி மற்றும் லாமின் யமல் நேருக்கு நேர் சந்திப்பதைக் காணும் வாய்ப்பை கால்பந்து ரசிகர்கள் இழந்துள்ளனர்.

போட்டிக்கு பல மாற்று இடங்கள் முன்மொழியப்பட்ட போதிலும் அர்ஜென்டினா அவற்றை நிராகரித்ததாக UEFA அறிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் முழு வளைகுடா பிராந்தியத்தையும் பாதித்துள்ளன, மேலும் உலகின் பரபரப்பான விமான மையங்களில் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்பாட்டாளர்கள் பல போட்டிகளை ரத்து செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக UEFA தெரிவித்துள்ளது,

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version