அதிக வெப்பம் செல்லப்பிராணிகளுக்கு ஆபத்து – வைத்தியர் எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் வெப்பம், குறிப்பாக கருப்பு நிற முடி கொண்ட நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உயிரிழப்பிற்கும் காரணமாக அமையும் என கால்நடை வைத்தியர் ஷோபாத் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

செல்லப்பிராணிகளை நிறுத்தப்பட்ட வாகனங்களில் வைக்கக் கூடாது என்றும், அதிக வெப்ப நேரங்களில் நேரடி வெயிலில் வெளியில் விட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். 40 கிலோவிற்கு மேல் எடை கொண்ட பெரிய இன நாய்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகமாக மூச்சுவிடுதல், நாக்கை வெளியே நீட்டுதல் போன்றவை வெப்ப அழுத்தத்தின் அறிகுறிகளாகும். இப்படிப்பட்ட நிலையில் உடனடியாக தண்ணீர் கொடுத்து குளிர்வித்து, விரைவாக வைத்தியரை அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், செல்லப்பிராணிகளுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கச் செய்வது, பகலில் வாய்க்கட்டுப் போடாதது, கூண்டுகளை நிழலில் வைப்பது ஆகியவை அவசியம் எனவும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply