சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (12.04) IPL இன் 18 ஆவது போட்டியாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 1 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கப்பிடல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது. இதில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 115(56) ஓட்டங்களை பெற்று அவரின் 4 ஆவது IPL சதத்தை பூர்த்தி செய்தார். ஆயுஷ் மாத்ரே 59(36) ஓட்டங்களை பெற்று ரிட்டயர்ட் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சில் அக்ஷர் படேல் 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 60(38) ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 41(24) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜேமி ஓவெர்ட்டன் 4 விக்கெட்களையும், அன்ஷுல் கம்பொஜ் 3 விக்கெட்களையும், கலீல் அஹமட், குர்ஜப்னீட் சிங், நூர் அஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்த போட்டியின் நாயகனாக சஞ்சு சாம்சன் தெரிவு செய்யப்பட்டார்.